Sunday, July 12, 2020



             ஸ்ரீ ராமஜயம்            

சீதம்மா ராமைய்யா
என்ன ஆளாக்கின சாமியையா
அழகையே காட்டி ஆனந்தம் தந்தே
வந்து கொஞ்சம் பாருமையா

கல்ல பெண்ணாக்கிபுட்ட
வில்லெல்லாம் வளச்சிப்புட்ட
கல்யாணம் பண்ணின சீதம்மாவோட
என்ன கொஞ்சம் பாருமையா

அயோத்தியில் நீ பொறந்தே 
காடெல்லாம் நீ திரிஞ்சே 
கேட்டதெல்லாம் தரும் சாமி 
வந்து கொஞ்சம் பாருமையா 

அரக்கிய அழிச்சுப்புட்ட 
பழம் வாங்கி சாப்பிட்டே 
எங்கிட்ட ஏதுமில்ல 
என்னையே தாரேன் ஏத்துக்கையா 

பறவைய பரலோகம் அனுப்பிட்ட
காக்காய காப்பாத்திப்புட்ட
குறங்கெல்லாம் கட்டிண்டே
என்ன கொஞ்சம் சேத்துக்கையா

ஏழு மரம் அடிச்சுப்புட்ட
ஏழு பேர சேத்துக்கிட்ட
ஏதும் பண்ணத்தெரியாத
இந்த ஏழையை பாருமையா 

அரக்கன அழிச்சுப்புட்ட
அன்னைய காப்பாத்திப்புட்ட
கஷ்டமெல்லாம் போக்கி
காத்தருள வேணுமையா

சீதம்மா ராமைய்யா
என்ன ஆளாக்கின சாமியையா
அழகையே காட்டி ஆனந்தம் தந்தே
வந்து கொஞ்சம் பாருமையா

              ஜயஸ்ரீராம்              


Wednesday, February 12, 2014

Ask Thou Shall be Given


ஸ்ரீராமஜயம் 

கேட்டதும்  கொடுப்பவன் 


கேட்டதும் கொடுப்பவனே கோதண்டபாணி 
சீதையின் நாயகனே சீதாராமா 
நீ உள்ள சன்னதியில் நின்றால் போதும் 
நிம்மதி தந்திடுவாய் நின்மலனே                           -     கேட்டதும் .....

வேதம் ஒன்றும் கற்றதில்லை வேதராமா 
வாழும் வகை தெரியவில்லை 
கோயிலில் குடிபுகுந்தாய் கோவிந்தா 
என் மனத்தினில் புகுந்திடுவாய் பட்டாபிராமா -    கேட்டதும் ....

தனுர்பங்கம் செய்தாய் கல்யாணராமா 
தந்தை சொல் தட்டவில்லை 
அரக்கர்களை அழித்தாய் ஆரண்யத்தில் 
அகக்கண்ணை அளித்திடுவாய் அயோத்திராமா -  கேட்டதும் ....

வேடுவ சோதரனே தாசரதி 
வானர மித்திரனே 
ராவணனை அழித்தாய் ஏழு நாளில் 
எங்களை ரக்ஷிப்பாய் எப்பொழுதும்                           -  கேட்டதும் ...


ராமதாசன் 


Saturday, January 18, 2014

HARI OM

ஸ்ரீராமஜயம் 

அரியை அறிவோம் 

அரியை அறியும் அறிவில்லை 
அருள்வாய் அராவமுதமே 

ஆக்கமும் ஆர்வமும் அறாமல் 
ஆர்ப்பரிப்பாய் அழகிய சிங்கமே 

இன்பத்தில் ஈர்க்கப்பட்டிருக்கிறோம் 
இலக்குமியுடன் இலக்கை அடைவிப்பாய் 

உண்மையில் ஊன்றியவனே உணர்வதும் 
உன்னையே உளருவதும் உன்னையே

கண்களால் கண்டருளினால் போதும் 
காணாத கானாம்ருதமே 

வந்தால் வருவாய் வராவிட்டாலும் வருவாய் 
வரம் தரும் வரதராஜன் நீ 

மண்டியிருக்கும் மயக்கத்தை 
மாயத்தால் மயக்கும் மாமாயன் நீ 

வேங்கடராமனும் நீயே வேங்கடக்ருஷ்ணனும் நீயே 
வேதமும் நீயே வேண்டுவதும் உன்னையே 

சங்கொடு சக்கரம் ஏந்தியவனே 
சங்கமித்திருப்பாய் சாகரமே 

திருத்திப்பணிகொண்டு 
திருவடியால் திருவருள்வாயே 

அடியேன் தாஸன் 

Saturday, January 4, 2014

ALMIGHTY

ஸ்ரீ ராமஜயம் 
எல்லாம் அவனே 

காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கனலும் நீயே 
கடலும் நீயே ஆகாயமும் நீயே பூமியுமாய் ஆதாரமானாயே 

அலைகடலாய் பரந்தெங்கும் புரண்டு அலைமகளை மார்பில் 
அலங்கரித்து அர்ச்சாவதாரமாய் அவனியில் ஆர்ப்பரித்தாயே 

ஆணாய் பெண்ணாய் அலியாய் அதுவுமிதுமாய் எதுவுமாய் 
ஆதியாய் அந்தமாய் அனைத்திலும் அந்தர்யாமியாய் ஆனாயே 

ஓங்காரமான ஒன்றாய் இலக்குமியுடன் இரண்டாய் மும்மூர்த்திகளில் 
முதல்வனாய் நால்வேதமாய் பஞ்சபூதங்களை ஆள்வாயே 

அறுசுவையாய் நறுமணமாய் சப்தஸ்வரமாய் எழேழுலகத்திலும் 
எண்திசையிலும்  எப்பொழுதும் எல்லாமும் எய்வாயே 

அங்கிங்கெனாதபடி அனைத்தையும் கடந்து உள்ளிருந்து 
இல்லையை இல்லை செய்தாயே 

அரக்கனுக்கு அரசையீன்று ஆனையை காத்து பறவையை வைகுந்தத்தேத்தி 
அனைத்தையும் அனுக்ரஹிக்கும் கற்பகம் ஆனாயே 

பரியாய் வேதத்தை உபதேசித்து மீனாய் அதைக்காத்து ராமனாய் 
அதன்வழி நடந்து கண்ணனாய் கீதையை உரைத்தாயே 

அவதாரங்களால் அறிவுரைத்தும் அஞ்ஞானிகளாயிருக்கிறோம் 
அருள் கூர்ந்து குறையில்லா வாழ்வளிப்பாயே 

நரசிம்மன்