Thursday, January 30, 2014
Thursday, January 23, 2014
Saturday, January 18, 2014
HARI OM
ஸ்ரீராமஜயம்
அரியை அறிவோம்
அரியை அறியும் அறிவில்லை
அருள்வாய் அராவமுதமே
ஆக்கமும் ஆர்வமும் அறாமல்
ஆர்ப்பரிப்பாய் அழகிய சிங்கமே
இன்பத்தில் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்
இலக்குமியுடன் இலக்கை அடைவிப்பாய்
உண்மையில் ஊன்றியவனே உணர்வதும்
உன்னையே உளருவதும் உன்னையே
கண்களால் கண்டருளினால் போதும்
காணாத கானாம்ருதமே
வந்தால் வருவாய் வராவிட்டாலும் வருவாய்
வரம் தரும் வரதராஜன் நீ
மண்டியிருக்கும் மயக்கத்தை
மாயத்தால் மயக்கும் மாமாயன் நீ
வேங்கடராமனும் நீயே வேங்கடக்ருஷ்ணனும் நீயே
வேதமும் நீயே வேண்டுவதும் உன்னையே
சங்கொடு சக்கரம் ஏந்தியவனே
சங்கமித்திருப்பாய் சாகரமே
திருத்திப்பணிகொண்டு
திருவடியால் திருவருள்வாயே
அடியேன் தாஸன்
Monday, January 13, 2014
Saturday, January 4, 2014
ALMIGHTY
ஸ்ரீ ராமஜயம்
எல்லாம் அவனே
காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கனலும் நீயே
கடலும் நீயே ஆகாயமும் நீயே பூமியுமாய் ஆதாரமானாயே
அலைகடலாய் பரந்தெங்கும் புரண்டு அலைமகளை மார்பில்
அலங்கரித்து அர்ச்சாவதாரமாய் அவனியில் ஆர்ப்பரித்தாயே
ஆணாய் பெண்ணாய் அலியாய் அதுவுமிதுமாய் எதுவுமாய்
ஆதியாய் அந்தமாய் அனைத்திலும் அந்தர்யாமியாய் ஆனாயே
ஓங்காரமான ஒன்றாய் இலக்குமியுடன் இரண்டாய் மும்மூர்த்திகளில்
முதல்வனாய் நால்வேதமாய் பஞ்சபூதங்களை ஆள்வாயே
அறுசுவையாய் நறுமணமாய் சப்தஸ்வரமாய் எழேழுலகத்திலும்
எண்திசையிலும் எப்பொழுதும் எல்லாமும் எய்வாயே
அங்கிங்கெனாதபடி அனைத்தையும் கடந்து உள்ளிருந்து
இல்லையை இல்லை செய்தாயே
அரக்கனுக்கு அரசையீன்று ஆனையை காத்து பறவையை வைகுந்தத்தேத்தி
அனைத்தையும் அனுக்ரஹிக்கும் கற்பகம் ஆனாயே
பரியாய் வேதத்தை உபதேசித்து மீனாய் அதைக்காத்து ராமனாய்
அதன்வழி நடந்து கண்ணனாய் கீதையை உரைத்தாயே
அவதாரங்களால் அறிவுரைத்தும் அஞ்ஞானிகளாயிருக்கிறோம்
அருள் கூர்ந்து குறையில்லா வாழ்வளிப்பாயே
நரசிம்மன்
Subscribe to:
Posts (Atom)