ஸ்ரீராமஜயம்
அரியை அறிவோம்
அரியை அறியும் அறிவில்லை
அருள்வாய் அராவமுதமே
ஆக்கமும் ஆர்வமும் அறாமல்
ஆர்ப்பரிப்பாய் அழகிய சிங்கமே
இன்பத்தில் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்
இலக்குமியுடன் இலக்கை அடைவிப்பாய்
உண்மையில் ஊன்றியவனே உணர்வதும்
உன்னையே உளருவதும் உன்னையே
கண்களால் கண்டருளினால் போதும்
காணாத கானாம்ருதமே
வந்தால் வருவாய் வராவிட்டாலும் வருவாய்
வரம் தரும் வரதராஜன் நீ
மண்டியிருக்கும் மயக்கத்தை
மாயத்தால் மயக்கும் மாமாயன் நீ
வேங்கடராமனும் நீயே வேங்கடக்ருஷ்ணனும் நீயே
வேதமும் நீயே வேண்டுவதும் உன்னையே
சங்கொடு சக்கரம் ஏந்தியவனே
சங்கமித்திருப்பாய் சாகரமே
திருத்திப்பணிகொண்டு
திருவடியால் திருவருள்வாயே
அடியேன் தாஸன்
No comments:
Post a Comment