ஸ்ரீராமஜயம்
கேட்டதும் கொடுப்பவன்
கேட்டதும் கொடுப்பவனே கோதண்டபாணி
சீதையின் நாயகனே சீதாராமா
நீ உள்ள சன்னதியில் நின்றால் போதும்
நிம்மதி தந்திடுவாய் நின்மலனே - கேட்டதும் .....
வேதம் ஒன்றும் கற்றதில்லை வேதராமா
வாழும் வகை தெரியவில்லை
கோயிலில் குடிபுகுந்தாய் கோவிந்தா
என் மனத்தினில் புகுந்திடுவாய் பட்டாபிராமா - கேட்டதும் ....
தனுர்பங்கம் செய்தாய் கல்யாணராமா
தந்தை சொல் தட்டவில்லை
அரக்கர்களை அழித்தாய் ஆரண்யத்தில்
அகக்கண்ணை அளித்திடுவாய் அயோத்திராமா - கேட்டதும் ....
வேடுவ சோதரனே தாசரதி
வானர மித்திரனே
ராவணனை அழித்தாய் ஏழு நாளில்
எங்களை ரக்ஷிப்பாய் எப்பொழுதும் - கேட்டதும் ...
ராமதாசன்
No comments:
Post a Comment