Wednesday, February 12, 2014

Ask Thou Shall be Given


ஸ்ரீராமஜயம் 

கேட்டதும்  கொடுப்பவன் 


கேட்டதும் கொடுப்பவனே கோதண்டபாணி 
சீதையின் நாயகனே சீதாராமா 
நீ உள்ள சன்னதியில் நின்றால் போதும் 
நிம்மதி தந்திடுவாய் நின்மலனே                           -     கேட்டதும் .....

வேதம் ஒன்றும் கற்றதில்லை வேதராமா 
வாழும் வகை தெரியவில்லை 
கோயிலில் குடிபுகுந்தாய் கோவிந்தா 
என் மனத்தினில் புகுந்திடுவாய் பட்டாபிராமா -    கேட்டதும் ....

தனுர்பங்கம் செய்தாய் கல்யாணராமா 
தந்தை சொல் தட்டவில்லை 
அரக்கர்களை அழித்தாய் ஆரண்யத்தில் 
அகக்கண்ணை அளித்திடுவாய் அயோத்திராமா -  கேட்டதும் ....

வேடுவ சோதரனே தாசரதி 
வானர மித்திரனே 
ராவணனை அழித்தாய் ஏழு நாளில் 
எங்களை ரக்ஷிப்பாய் எப்பொழுதும்                           -  கேட்டதும் ...


ராமதாசன் 


No comments:

Post a Comment