Sunday, July 12, 2020



             ஸ்ரீ ராமஜயம்            

சீதம்மா ராமைய்யா
என்ன ஆளாக்கின சாமியையா
அழகையே காட்டி ஆனந்தம் தந்தே
வந்து கொஞ்சம் பாருமையா

கல்ல பெண்ணாக்கிபுட்ட
வில்லெல்லாம் வளச்சிப்புட்ட
கல்யாணம் பண்ணின சீதம்மாவோட
என்ன கொஞ்சம் பாருமையா

அயோத்தியில் நீ பொறந்தே 
காடெல்லாம் நீ திரிஞ்சே 
கேட்டதெல்லாம் தரும் சாமி 
வந்து கொஞ்சம் பாருமையா 

அரக்கிய அழிச்சுப்புட்ட 
பழம் வாங்கி சாப்பிட்டே 
எங்கிட்ட ஏதுமில்ல 
என்னையே தாரேன் ஏத்துக்கையா 

பறவைய பரலோகம் அனுப்பிட்ட
காக்காய காப்பாத்திப்புட்ட
குறங்கெல்லாம் கட்டிண்டே
என்ன கொஞ்சம் சேத்துக்கையா

ஏழு மரம் அடிச்சுப்புட்ட
ஏழு பேர சேத்துக்கிட்ட
ஏதும் பண்ணத்தெரியாத
இந்த ஏழையை பாருமையா 

அரக்கன அழிச்சுப்புட்ட
அன்னைய காப்பாத்திப்புட்ட
கஷ்டமெல்லாம் போக்கி
காத்தருள வேணுமையா

சீதம்மா ராமைய்யா
என்ன ஆளாக்கின சாமியையா
அழகையே காட்டி ஆனந்தம் தந்தே
வந்து கொஞ்சம் பாருமையா

              ஜயஸ்ரீராம்