ஸ்ரீ ராமஜயம்
சீதம்மா ராமைய்யா
என்ன ஆளாக்கின சாமியையா
அழகையே காட்டி ஆனந்தம் தந்தே
வந்து கொஞ்சம் பாருமையா
கல்ல பெண்ணாக்கிபுட்ட
வில்லெல்லாம் வளச்சிப்புட்ட
கல்யாணம் பண்ணின சீதம்மாவோட
என்ன கொஞ்சம் பாருமையா
அயோத்தியில் நீ பொறந்தே
காடெல்லாம் நீ திரிஞ்சே
கேட்டதெல்லாம் தரும் சாமி
வந்து கொஞ்சம் பாருமையா
அரக்கிய அழிச்சுப்புட்ட
பழம் வாங்கி சாப்பிட்டே
எங்கிட்ட ஏதுமில்ல
என்னையே தாரேன் ஏத்துக்கையா
பறவைய பரலோகம் அனுப்பிட்ட
காக்காய காப்பாத்திப்புட்ட
குறங்கெல்லாம் கட்டிண்டே
என்ன கொஞ்சம் சேத்துக்கையா
ஏழு மரம் அடிச்சுப்புட்ட
ஏழு பேர சேத்துக்கிட்ட
ஏதும் பண்ணத்தெரியாத
இந்த ஏழையை பாருமையா
அரக்கன அழிச்சுப்புட்ட
அன்னைய காப்பாத்திப்புட்ட
கஷ்டமெல்லாம் போக்கி
காத்தருள வேணுமையா
சீதம்மா ராமைய்யா
என்ன ஆளாக்கின சாமியையா
அழகையே காட்டி ஆனந்தம் தந்தே
வந்து கொஞ்சம் பாருமையா
ஜயஸ்ரீராம்
No comments:
Post a Comment