ஸ்ரீ ராம ஜயம்
பாரளந்தாய் நொடிப்பொழுதில்
பாரதம்முடித்தாய் 18 நாட்களில்
கானகம் கடந்தாய் 14 வருடத்தில்
பாவம் களைய எத்தனை சன்மங்களோ
சன்மசன்மமாய் காத்துக்கிடந்தும்
பாவங்கள் குறைந்தபாடில்லை
குறையாத பாவம் நிறைவாக தீர
மறையின் பொருள் மறையாமல் தெரிய
தெறிந்த நாமங்களை தெளிவாக செப்ப
செப்பும் நாமங்களை குறையாமல் ஏத்த
ஏறியிருக்கும் பாவங்கள் நிறைவாக தீருமே
க பா நரசிம்மன்
No comments:
Post a Comment