Saturday, December 28, 2013

MISSION POSSIBLE

ஸ்ரீராமஜயம் 
எட்டாததும் எட்டும் 

கண்ணெதிரே தோன்றி கனிமுகத்தை கட்டாமல் 
கண்ணாமூச்சி காட்டுகிறான் கண்ணன் 

கண்ணனென்னும் கருந்தெய்வம் கார்முகிலைப்போல 
கருணையை மழையாய் பொழிவான் 

பொலிந்து நின்ற பொன்மேனியான் பொருளாய் 
பொருளின் பொருளாய் இருக்கிறான் 

இலக்குமியுடன் இருப்பவனிடம் இலக்கை இரந்தால் 
இருப்பதையும் இருக்கையுடன் அளித்திடுவான் 

அண்டத்தை  ஆதிமுதல்  ஆண்டு உருவமாய் 
அருவமாய் அனைத்திலும் அனைத்தையும் அருள்கிறான் 

அருளமுதம் அறாத அலைகடல் மகளை அகலாமல் ஏற்றி 
இகபரத்தை ஈந்தருள்வான்  ஈசன் 

ஈரடியால் உலகளந்து மும்மூர்த்திகளில் முதல்வனாக நால்வேதத்தை 
ஈன்று ஐந்தை அடக்கி ஆறறிவை ஏற்றிடுவான் 

ஏழேழுலகமும் தானேயாகி எட்டெழுத்தால் வ்யாபித்திருப்பவனை 
எப்பொழுதும் எண்ணினால் எட்டாததும் எட்டும் 

அடியேன்  கண்ணனின் தாஸன் 

No comments:

Post a Comment