ஸ்ரீராமஜயம்
எட்டாததும் எட்டும்
கண்ணெதிரே தோன்றி கனிமுகத்தை கட்டாமல்
கண்ணாமூச்சி காட்டுகிறான் கண்ணன்
கண்ணனென்னும் கருந்தெய்வம் கார்முகிலைப்போல
கருணையை மழையாய் பொழிவான்
பொலிந்து நின்ற பொன்மேனியான் பொருளாய்
பொருளின் பொருளாய் இருக்கிறான்
இலக்குமியுடன் இருப்பவனிடம் இலக்கை இரந்தால்
இருப்பதையும் இருக்கையுடன் அளித்திடுவான்
அண்டத்தை ஆதிமுதல் ஆண்டு உருவமாய்
அருவமாய் அனைத்திலும் அனைத்தையும் அருள்கிறான்
அருளமுதம் அறாத அலைகடல் மகளை அகலாமல் ஏற்றி
இகபரத்தை ஈந்தருள்வான் ஈசன்
ஈரடியால் உலகளந்து மும்மூர்த்திகளில் முதல்வனாக நால்வேதத்தை
ஈன்று ஐந்தை அடக்கி ஆறறிவை ஏற்றிடுவான்
ஏழேழுலகமும் தானேயாகி எட்டெழுத்தால் வ்யாபித்திருப்பவனை
எப்பொழுதும் எண்ணினால் எட்டாததும் எட்டும்
அடியேன் கண்ணனின் தாஸன்
No comments:
Post a Comment